இஸ்கான் தமிழ்நாடு பாத யாத்திரை
ஜனவரி 17, திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் பயணிக்கக்கூடிய சிறப்பு பாத யாத்திரை, தவத்திரு லோகநாத ஸ்வாமி அவர்களால் திருநெல்வேலியில் தொடக்கி வைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ கௌர நித்தாயின் விக்ரஹங்களை மாட்டு வண்டியில் பூட்டிக் கொண்டு, தமிழகம் முழுவதும் வலம்வரவுள்ள இந்த பாத யாத்திரைக் குழு, எல்லா கிராமங்களையும் நகரங்களையும் கீர்த்தனத்தினாலும் ஆன்மீகச் சொற்பொழிவுகளாலும் உய்விக்க உள்ளது. தொடக்க விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுப்பிக்கப்பட்டது: 12 டிசம்பர், 2024